சி.பி.ஐ விசாரணைக்குச் சென்று வந்த பின் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிகள் என்றார், எங்களுக்கு பொது எதிரி பா.ஜ.க என்றார், ஆனால் அவர் பா.ஜ.க-வை மட்டும் விமர்சிக்கவில்லை அது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “விஜய் எங்களுடைய கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை.

எங்களுடன் கூட்டணியில் இருந்தால்தான் அதைப் பற்றிப் பேச வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். எந்தக் கட்சி களத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தேர்தல் முடிந்தால்தான் யார் இருக்கிறார்கள், யார் காணமால் போனார்கள் என்பதைப் பார்க்க முடியும்” என்றார்.