அதிமுக பொங்கல் கொண்டாட்டம் : மாட்டு வண்டியில் வர போகும் எடப்பாடி பழனிசாமி  – Kumudam

Spread the love

கிறிஸ்துவ விழா: கேக் வெட்டும் எடப்பாடி 

கிறிஸ்துவ மற்றும் பொங்கல் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்தாண்டு கிறிஸ்துவ பெருவிழா நாளை அதிமுக சார்பில் நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு வருகின்ற நாளை மறுநாள் 18.12.2025 வியாழக் கிழமை மாலை 4.30 மணியளவில், சென்னை, கீழ்பாக்கம், CSI லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்களும், அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

எடப்பாடி மாட்டு வண்டியில் வலம் வர ஏற்பாடு 

அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி மேட்​டூர் தொகு​தி​யில் பொங்​கல் பண்​டிகையை கொண்​டாடும் வகை​யில் கொளத்தூர், மேச்​சேரி ஆகிய பகு​தி​களில் உள்ள கிரா​மங்​களில் புறநகர் மாவட்ட செய​லா​ளர் இளங்​கோவன் தலை​மையி​லான மேட்​டூர் தொகுதி நிர்​வாகி​கள் கிரா​மத்தை தேர்வு செய்​யும் பணி​யில் டிச 16-ம் தேதி  ஈடு​பட்​டனர்.

தொடர்ந்​து, கோனூர் பகு​தி​யில் உள்ள மாரி​யம்​மன் கோயில் திடலில் பிரம்​மாண்​ட​மாக 108 பானை​களில் பொங்​கல் வைத்து கொண்​டாட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.பழனி​சாமியை மாட்டு வண்​டி​யில் ஊர்​வல​மாக அழைத்து வரவும், கலை நிகழ்ச்​சிகள், ஒயி​லாட்​டம், பொம்​மலாட்​டம் உள்​ளிட்ட ஏற்​பாடு​கள் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *