இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ஆசிய கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக 16000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையை எட்டுவதற்கு அவர் 340 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர்(353 இன்னிங்ஸ்), குமார் சங்ககரா(360 இன்னிங்ஸ்), மஹேலா ஜெயவர்த்தனே (401 இன்னிங்ஸ்) எட்டியுள்ளனர். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக 4000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் 4000 ரன்களை குவித்துள்ளார். இந்தியர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு(3990 ரன்கள்) அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையும் தன்வசமாக்கியுள்ளார் விராட் கோலி.