அமிதாப் பச்சன், ” ‘இக்கிஸ்’ திரைப்படம் நமக்கு கிடைத்த கடைசி நினைவுச் சின்னம். கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் விட்டுச் சென்ற பொக்கிஷம்.
ஒரு கலைஞன் தன் உயிரின் கடைசி மூச்சு வரை கலையைத் தொடர விரும்புவான். அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார்.
அவர் சாதாரண மனிதர் மட்டுமல்ல. அவர் ஒரு உணர்வு!” என்றவர், “நாங்கள் பெங்களூரில் ‘ஷோலே’ படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம்.

அப்போது அவர் மல்யுத்த வீரரைப் போன்ற ஒரு ஹீரோவாக இருந்தார். அப்படத்தின் என்னுடைய கதாபாத்திரத்தின் இறப்புக் காட்சியில் நீங்கள் என்னிடத்தில் பார்த்த நடிப்பைக் கொண்டு வர அவர் உதவினார்.
ஏனெனில் அந்தக் காட்சியில் அவர் என்னை அவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அந்தக் காட்சி கோரும் எமோஷனை இயல்பான நடிப்பின் மூலம் அவர் வெளிப்படுத்தினார்.” எனக் கூறியிருக்கிறார்.