மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் “நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது.
இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
“அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது.
நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன்.
யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.