ஒரு வழக்கைத் துப்பறியும் நிஜமான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, யதார்த்தமான முறையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஹ்மான் ஒரு முக்கியப் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பகுதியை தயாரித்திருக்கிறேன். படத்தின் ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இணைய முடியுமா? என்று படக்குழு கேட்டபோது, படமாக்கப்பட்ட காட்சிகளின் தரத்தைப் பார்த்துத் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் இதில் தயாரிப்பாளராகவும் பங்கெடுக்கத் தீர்மானித்தேன்.

இப்போது ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்ற அந்தப் பழைய முக்கோணக் கதைகள் மறைந்துவிட்டன. இந்தப் படத்தைப் பொறுத்தவரை கதைதான் முதன்மையானது. அதில் நாங்கள் அனைவரும் கதாபாத்திரங்களாகப் பங்களித்துள்ளோம். வெறும் ‘பெண் மையக் கதாபாத்திரம்’ என்பதற்காக மட்டும் எந்தப் படத்தையும் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்வதில்லை. நல்ல கதை அமைந்தால் மட்டுமே நடிப்பேன். நல்ல கதையாக இருந்தால், அதில் நடிப்பது ஹீரோவா அல்லது ஹீரோயினா என்பதைப் பார்க்காமல் ரசிகர்கள் கண்டிப்பாகப் பேராதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.