அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம் | Arrangements for Gram Sabha meeting on August 15 in all village panchayats

1372622
Spread the love

சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, அதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

ஆண்​டு​தோறும் குடியரசு தினம், சுதந்​திர தினம், காந்தி ஜெயந்தி உள்​ளிட்ட 6 முக்​கிய நாட்​களில் தமிழகத்​தில் உள்ள 12,482 கிராம ஊராட்​சிகளில் கிராமசபை கூட்​டங்​கள் நடத்​தப்​படும். இக்​கூட்​டங்​களின் வாயி​லாக, பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​படும்.

அந்த வகை​யில், வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று மாநிலம் முழு​வதும் கிராமசபைக் கூட்​டம் நடத்​து​வது தொடர்​பாக ஊரக வளர்ச்​சித்​துறை ஆணை​யர் பொன்​னை​யா, மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறிருப்​ப​தாவது: க.15ம் தேதி சுதந்​திர தினத்​தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்​டங்​கள் நடத்​தப்பட வேண்​டும். மக்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் வகை​யில் இடம், நேரத்தை அவர்​களுக்கு முன்​னரே தெரிவிக்க வேண்​டும். மதச்​சார்​புள்ள எந்த இடத்​தி​லும் கூட்​டம் நடத்​தப்​படக் கூடாது. கடந்த 2024 ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையி​லான காலத்​தில் கிராம ஊராட்​சி​யின் பொது நிதி​யில் இருந்து மேற்​கொள்​ளப்​பட்ட செல​வு​கள் குறித்த அறிக்கை கூட்​டத்​தில் படிக்​கப்​பட்டு ஒப்​புதல் பெறப்பட வேண்​டும்.

சுத்​த​மான குடிநீர் விநியோகம், வரி செலுத்​தும் சேவை, இணைய வழி மனைப்​பிரிவு, கட்​டிட அனு​ம​தி​கள், சுய சான்று அடிப்​படை​யில் குடி​யிருப்​புக் கட்​டிடங்​களுக்கு உடனடி பதிவு மூலம் அனு​ம​தி​யளித்​தல் உள்​ளிட்​டவை குறித்து கூட்​டத்​தில் விவா​திக்க வேண்​டும். கிராமப் பகு​தி​களில் ஒற்​றைச்​சாளர முறை​யில் சுய சான்றை அடிப்​படை​யாக கொண்டு கட்​டிட அனு​மதி பெறும் வகை​யில் ஒருங்​கிணைக்​கப்​பட்ட நடை​முறை தமிழக அரசால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி, 2,500 சதுரஅடிக்கு குறை​வான மனைப் பரப்​பில் 3,500 சதுரஅடி வரை தரைத்​தளம் அல்​லது தரை மற்​றும் முதல் தளம் கொண்ட 2 குடி​யிருப்பு வரை உள்ள குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்கு ஒற்​றைச்​சாளர முறை​யில் சுய சான்​றின் அடிப்​படை​யில் அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இதுகுறித்து கிராம சபை கூட்​டத்​தில் தெரிவிக்க வேண்​டும்.

மேலும், தமிழ்​நாடு எளிமைப்​படுத்​தப்​பட்ட ஊராட்சி கணக்​கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டம், தூய்மை பாரத இயக்​கம், ஜல்​ஜீவன் திட்​டம் உள்​ளிட்​டவை தொடர்​பாக​வும், பள்​ளி​கள், அங்​கன்​வாடி மையங்​கள், அரசு பொதுக் கட்​டிடங்​கள் அனைத்​தி​லும் குழாய் இணைப்​பு​கள் மூலம் தூய்​மை​யான குடிநீர் விநி​யோகம் செய்​யப்​படு​வதை உறுதி செய்​வது உள்​ளிட்​டவை குறித்​தும் விரி​வாக ஆலோ​சிக்​கப்பட வேண்​டும்.இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அனைத்து கிராம ஊராட்​சிகளி​லும் வரும் 15-ம் தேதி கிராமசபைக் கூட்​டம் நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *