இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தனது வெற்றிப் பயணத்தை தொடங்கும் நோக்கில் களமிறங்குகிறது.
இந்த நிலையில், முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.