இந்த நிலையில், ராஜீவ் காந்தி பிறந்த நாளன்று ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில்,
“இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது.
அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிகாரில் வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தியால், இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை.