ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் நடத்திய `தி லீடர்ஷிப் சம்மிட்” நிகழ்வில் தன்னுடைய கரியரின் தொடக்க காலம் குறித்தும், அப்போது அவர் எடுத்த தவறான முடிவுகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆமிர் கான்.

ஆமிர் கான் பேசுகையில், “எனது முதல் திரைப்படமான ‘கயாமத் செ கயாமத் தக்’ (QSQT) மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரே இரவில் நான் நட்சத்திரமாக மாறினேன்.
அதன் பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் பணியாற்ற விரும்பிய இயக்குநர்களிடமிருந்து வாய்ப்புகள் எனக்கு வரவில்லை.
எனக்கு விருப்பமான இயக்குநர்களின் பட்டியல் ஒன்று இருந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட என்னை அணுகவில்லை.