அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், நாட்டின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், துரதிருஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இன்று அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள இந்த 50% வரியால், நாட்டின் ஏற்றுமதி 55% பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் பொருள்கள், ஜவுளித் துறை பொருள்கள், தோல் பொருள்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.