எனவே, இச்சிலையை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்கெனவே உள்ள வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அமெரிக்க நாட்டுக்கு தமிழக அரசின் உயா்நிலை அலுவலா்கள் கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடிக்கு குறையாமல் இருக்கும் என்றாா் பொன் மாணிக்கவேல்.
அமெரிக்காவில் உள்ள சோழா் கால சிலையை மீட்க வலியுறுத்தல்
