அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

Dinamani2f2025 02 062f6ld6lmft2fap25030703734304.jpg
Spread the love

ஆர்ஜென்டீனா விலகல்

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்டீனா அதிபர் ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அறிவித்தார்.

அதிபரின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“தொற்றுநோய் காலத்தில் சுகாதார மேலாண்மையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கான அரசாணையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வரும் முழு நிதியும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *