ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான்.
கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன.
தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை.