அமைதிப்படை அமாவாசை தான் ஓபிஎஸ், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என நினைப்பவர் – ஆர்.பி.உதயக்குமார்

Spread the love

திமுகவில் இனி எந்த பதவி பெற்றாலும் அது துரோகத்திற்கு கிடைத்த பரிசாகத்தான் ஓபிஎஸ்க்கு இருக்கும். அது விசுவாச பரிசாக இருக்காது.  பொது வாழ்க்கையில் எப்படி இருக்கக் கூடாது என்ற தவறாக முன் உதராணத்தை முன் எடுத்துள்ளார். அன்றைக்கு அம்மா பக்தனாக இருந்த ஓபிஎஸ், இன்றைக்கு அறிவாலயத்தின் பக்தனாக மாறிவிட்டார்.

பொதுவாக எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட  எந்த முடிவு எடுக்க மாட்டார். மூத்த தலைமைகளை நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள் ,கலந்து பேசி பொதுகுழுவில் தான் முடிவு எடுப்பார், பொதுக்குழு முடிவின் படிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஸ்டாலின் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பதவிக்காக எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் செல்வார்.

அதிமுகவில் எந்த கிளைச் செயலாளரும் செல்லவில்லை, இறந்து போனாலும் தன் மீது அதிமுக கொடியை வைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்.  போர்க்களத்தில் எதிரிடம் சரணடைய கூடாது அப்படி நிலை ஏற்பட்டால் சாவதே மேல் என்று வீரர்கள் நினைப்பார் அதுபோலத்தான் அதிமுக தொண்டர்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *