“நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன்.
இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.
இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன்” என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா.
வாழ்த்துகள் அவந்திகா!