வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்?
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம்.