ஆனால், 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பால்ய கால நண்பர் கோபாலகிருஷ்ணனை மீண்டும் சந்தித்தார். வழக்கம் போல பல்வேறு விஷயங்களைப் பேசியவர், தனது வெள்ளி பிசினஸில் மிகப் பிரமாதமான லாபம் கிடைத்திருப்பதைச் சொன்னார். அப்போதுதான் ஒரு கிலோ வெள்ளி சுமார் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதைக் கேட்டு அதிர்ந்து போனார் சுந்தர்ராஜன்.
40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி வாங்கி வைத்திருந்தால், இப்போது 4 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்க முடியும். இது கிட்டத்தட்ட 10 மடங்கு லாபம். 4 கோடி ரூபாய் 1000 வெள்ளி வாங்கி வைத்திருந்தால், இன்றைக்கு அது 10 மடங்கு லாபத்தைத் தந்திருக்கும். இதனால் தனக்கு 40 கோடி கிடைத்திருக்குமே! என்று கணக்கு போட்டு பார்த்த சுந்தர்ராஜனுக்கு மனம் ஆறவில்லை. மிகப் பெரிய தவறு செய்திருப்பதை உணர்ந்தார் அவர்.
அவர் செய்த தவறுகள் என்ன, அந்தத் தவறுகளை எப்படித் தவிர்த்திருக்க முடியும்?

1. பங்குச் சந்தை முதலீடோ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடோ, கமாடிட்டி சந்தை முதலீடோ எதுவாக இருந்தாலும், அது தொடர்பாக ஒரு நிபுணரைக் கலந்தாலோசித்து, தனது முதலீட்டுத் திட்டம் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.
சுந்தர்ராஜனைப் பொறுத்தவரை, அவர் எந்த நிபுணருடன் கலந்து ஆலோசிக்காமல், தனது விருப்பப்படி நடந்துகொண்டதால், எதை வாங்க வேண்டும், எந்த அளவுக்கு, எந்த விலையில் வாங்க வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. நீண்ட நாள் முதலீடு என்கிற தெளிவான முடிவு சுந்தர்ராஜனுக்கு இருந்திருந்தால், அவர் கமாடிட்டி சந்தையில் வாங்காமல், பிசிக்கலாகவே வாங்கி இருக்கலாம்.
2. பங்கோ அல்லது கமாடிட்டியோ எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அந்த முதலீட்டை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்கப் போகிறோம் என்கிற தெளிவான திட்டம் வேண்டும். 10 ஆண்டுகள் அந்த முதலீட்டை வைத்திருக்கப் போகிறோம் எனில், இடைப்பட்ட காலத்தில் அந்த முதலீட்டில் இருந்து ஏன் வெளியேற வேண்டும் என்கிற தெளிவான முடிவு வேண்டும்.
3. பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட், கமாடிட்டி என எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், ஒரே நேரத்தில் கணிசமாக வாங்குவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது அவசியம். அதே போல, விற்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக விற்பது அவசியம். உதாரணமாக,சுந்தர்ராஜன் ஒரே நேரத்தில் 1000 கிலோ வெள்ளியை வாங்க நினைக்காமல், 100 கிலோ என்கிற கணக்கில் 10 முறை வாங்கி இருக்கலாம்.