அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணி – மின்சார ரயில்களின் சேவையில் பகுதி ரத்து | Maintenance Work at Arakkonam Yard – Partial Cancellation of Service of Electric Trains

1293695.jpg
Spread the love

சென்னை: அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், 12 (நாளை) மற்றும் 14-ம் தேதிகளில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் – திருத்தணி இடையேயும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் – அரக்கோணம் இடையேயும் ஆக.12 மற்றும் 14-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் இடையே காலை 11.15 மற்றும் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம் – திருவள்ளூர் இடையேயும், திருத்தணி – சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருத்தணி – திருவள்ளூர் இடையேயும், வேலூர் கன்டோன்மென்ட் – அரக்கோணம் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,

சித்தேரி – அரக்கோணம் இடையேயும், சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையேயும் 12 மற்றும்14-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *