அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

dinamani2F2025 05 152Ff6cjgfl02FPresident Murmu
Spread the love

மத்திய அரசு: இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முன்மொழிவு குறிப்பு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மசோதாவை நிறுத்திவைப்பதற்கான விருப்புரிமை அரசமைப்பு ரீதியாக குடியரசுத் தலைவர், ஆளுதருக்கு உள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு அரசமைப்பில் எந்தவொரு வெளிப்படையான காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.

அப்படியிருக்கையில், நீதித் துறை காலக்கெடு விதிப்பது அரசமைப்பின் நோக்கத்தை தோல்வியுறச் செய்துவிடும்; அரசமைப்புச் சீர்குலைவுக்கும் வழிவகுத்துவிடும். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித்துறை காலக்கெடு விதித்தது அரசமைப்புச் செயல்பாட்டில் ஒரு குழப்பத்தையும், சிக்கலையும் உருவாக்கியுள்ளது.

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு விதிப்பது அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சமமாகும். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என அதில் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *