அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல் | Minister Govi Chezhiaan informs Gender Psychology Awareness Committee in Govt Arts Colleges

1372438
Spread the love

சென்னை: அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். சென்னை நந்​தனம் அரசு கலைக்கல்​லூரி​யில் “பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்​வுக் குழு” நேற்று தொடங்​கப்​பட்​டது. இக்​குழுவை உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன், மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே உயர்​கல்​வி​யில் தமிழகம் உயர்ந்த நிலை​யில் இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தமிழக முதல்​வர் பல்​வேறு திட்​டங்​களைச் செயல்​படுத்தி வரு​கிறார். ஆண்​டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்​கும் இலக்​குடன் தொடங்​கப்​பட்ட `நான் முதல்​வன்’ திட்​டத்​தில் கடந்த 3 ஆண்​டு​களில் மட்​டும் 41 லட்​சம் பேருக்கு பயிற்சி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதன் காரண​மாக, முன்​னெப்​போதும் இல்​லாத அளவில் அகில இந்​திய குடிமைப்​பணித் தேர்​வில் வெற்​றி​பெறும் தமிழக மாணவர்களின் எண்​ணிக்கை உயர்ந்​துள்​ளது.‘புது​மைப் பெண்’ என்ற திட்​டத்​தின் மூலம் உயர்​கல்​வி​யில் சேர்க்கை பெறும் மாணவி​களுக்கு கல்வி உதவித்​தொகை​யாக மாதம்​தோறும் ரூ.1,000 வழங்​கப்​படு​கிறது.

இதனால் உயர்​கல்​வி​யில் மாணவி​களின் சேர்க்கை உயர்ந்​துள்​ளது. மாணவர்​களும் பயன்​பெறும் நோக்​கில் ‘தமிழ் புதல்​வன்’ திட்டத்​தை​யும் முதல்​வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாணவர்​கள் கல்வி பயிலும் இடங்​களில் உரிய புரிதலுடன் பாலின பாகு​பாடின்​றிச் செயல்பட ஏது​வாக “பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்வு குழு” உயர்​கல்வி நிறு​வனங்​களில் அமைக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, தற்​போது நந்​தனம் கல்​லூரி​யில் பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்​வுக் குழு​வின் செயல்​பாடு தொடங்​கப்​பட்​டுள்​ளது. இது போன்று தமிழகத்​தில் உள்ள அனைத்து கல்​லூரி​களி​லும் இக்​குழு அமைக்​கப்​படும்.

உளவிய​லா​ளர்​கள், சமூக​வியல் அறிஞர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பெண்​ணுரிமை வல்​லுநர்​கள், மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட அனை​வரின் வழி​காட்​டு​தலுடன் இக்​குழுக்​கள் மாணவ-​மாணவி​களுக்கு தேவை​யான புரிதலை​யும், விழிப்​புணர்​வை​யும் ஏற்படுத்தும். மேலும், பெற்​றோர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் மாணவர்​கள் இடையே உறவை வலுப்​படுத்​த​வும் உதவும். கட்​டமைக் கப்​பட்ட சமு​தா​யத்தை உரு​வாக்​கு​வதே இதன் முக்​கிய நோக்​க​ம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மக்​கள் நல்​வாழ்​வுத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பேசுகை​யில், “மாணவர்​கள் பாலின விழிப்​புணர்வு தொடர்​பாக நடத் தப்​படும் கருத்​தரங்​கு​கள் மற்​றும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளில் தவறாமல் பங்​கேற்க வேண்​டும்” என்று கேட்​டுக்​கொண்​டார். இந்நிகழ்ச்​சி​யில், கல்​லூரி கல்வி ஆணை​யர் எ.சுந்​தர​வல்​லி, கல்​லூரி முதல்​வர் வே.பு​கழேந்​தி, குழு​வின் தலை​வர் மு.மஜிதாபர்வின், மருத்​து​வர் திரு​மகள்​ மற்​றும்​ குழு உறுப்​பினர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *