அரசு போக்குவரத்து-போலீசார் மோதல்

Sds
Spread the love

நாங்குநேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகபாண்டியன் என்ற போலீஸ்காரர் சீருடையில் அரசு பஸ்சில் பயணம் செய்யும் போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்டுத்தியது.

கட்டாயம் டிக்கெட்

இதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. மேலும் காவலர்கள் வாரண்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க அனுமதி, இல்லையேல் கட்டாயம் டிக்கெட் பெற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக போலீசார் அரசு பஸ்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் செயல்பட தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு நோ பார்க்கிங், ,அதிக பயணிகளை ஏற்றவது உள்ளிட்ட சட்ட விதிமீறல்களை காரணம் காட்டி அபராதம் விதிக்க தொடங்கி உள்ளனர். இதனால் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையேயான மோதல் போக்கு முற்றி வருகிறது.

அபராதம்

தொடர்ந்து அபராதம் விதிப்பதை போலீசார் கையில் எடுத்து இருப்பதால் போக்குவரத்து துறையினர் செய்வது அறியாமல் திகைத்துபோய் உள்ளனர். பெரும்பாலும் போலீசார் , அரசு பஸ்களுக்கு அபராதம் விதிப்பது என்பது இருக்காது. ஆனால் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே சட்டரீதியான மோதல் என்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது.

கடிதம்

அந்த கடிதத்தில், இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு டி¬ரைவர்கள், கண்டக்கடர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *