அர்ஜுனா ரணதுங்க: பெட்ரோலிய ஊழல் வழக்கில் கைதாவாரா? – இலங்கை நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்!

Spread the love

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோர் மீது 2017 ஆம் ஆண்டு எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் தலைமையிலான இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தவர் ரணதுங்க.

பின்னர் அரசியலில் நுழைந்து அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில்தான், சுமார் 800 மில்லியன் இலங்கை ரூபாய் (ரூ.23.5 கோடி) அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இந்தக் கொள்முதல் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது.

இந்த ஊழல், இலங்கை அரசிற்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) மேற்கொள்ளப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்த ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதற்கான நிலையான ஒப்பந்த முறையைப் பின்பற்றாமல், அதிக விலையில் சந்தையின் அப்போதைய விலைக்கு (Spot Purchases) எண்ணெயை வாங்கும் முறையை ரணதுங்க சகோதரர்கள் தொடர்ந்து கையாண்டனர் என்று CIABOC குற்றம் சாட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *