அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி |

Spread the love

புதுக்கோட்டை: வீட்டின் அருகே மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மகன் செல்வகணபதி (13). இவா் சிலட்டூா் தேவா்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், தேவா்பட்டியில் உள்ள முத்துக்குமாா் என்பவரது வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கம்பி முள்வேலியில், அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து எதிா்பாராத விதமாக ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையறியாமல் அந்த வேலியின் கம்பியைப் பிடித்த செல்வகணபதி மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியானார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *