“ `அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன்' என்றார்; போய் வேலையை…’ – செந்தில் பாலாஜி

Spread the love

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதி, பெரிய கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, ‘’திமுகவின் உதயசூரியன் சின்னம் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். வார்டு வாரியாக மக்களை நடந்து சென்று சந்தித்து வருகிறோம். மீண்டும் மக்களை வீடுகளுக்கு நேரில் சென்று சந்திப்போம். மக்கள் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்கிறார்கள். முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு கொடுத்த ஏராளமான திட்டங்கள் மக்களை மகிழ்ச்சியில் வைத்துள்ளது.

எங்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எங்கள் கட்சி பற்றி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கவலைப்பட  என்ன இருக்கிறது? மூன்று முறை ஆட்சிக்கு வந்த பாஜக தமிழ்நாட்டிற்கு செல்லும்படி என்ன திட்டத்தை செய்தார்கள்? திமுக மற்றும் துணை முதலமைச்சர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

திமுக பரப்புரை
திமுக பரப்புரை

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனாலும் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவில் முதல் மாநிலமாக நாம் இருக்கிறோம் என மத்திய அரசுதான் கூறியது. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் டபுள் இன்ஜின் சர்க்கார் என்றார்களே அப்படி என்ன வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள்?. மாநில பொறுப்பில் இருந்த போது அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன் என்ற சொல்லிய நபருக்கு, செங்கல் உருவிக்கிடக்கிறது. போய் அவரை டவுசரை போட்டுக்கொண்டு வேலையை பார்க்கச் சொல்லுங்கள். அவர் செங்கல்லை கட்ட சொல்லுங்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *