சாந்தோமில் நீங்கள் சொல்லும் அந்த இடத்தில் அம்மாவே வந்து உணவகத்தை திறந்தார். அன்றைய நாளில் அம்மாவுக்கு இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அம்மா உணவகம் தமிழ்நாடு முழுக்க விரிவுப்படுத்தப்பட்டது. ஏழை மக்கள் பசியாறும் அந்தத் திட்டத்தை இன்னும் விரிவாக்க வேண்டுமே தவிர, அதை முடக்க நினைக்கக்கூடாது. சரியாக பேணி பாதுகாத்து சுகாதாரமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்றார்.
அரசு சார்பில் 21 கோடி ரூபாய் ஒதுக்கியும் அந்த அம்மா உணவகம் ஏன் முறையாக புனரமைக்கப்படவில்லை என்பதை கேட்க சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவையும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனையும் தொடர்புகொண்டோம். இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை.
அன்றாடம் பசியை போக்கும் அந்த அம்மா உணவகம் முறையாக புனரமைக்கப்பட்டு சுகாதாரமாக உணவு வழங்கப்படுமா என்பதே அந்தப் பகுதி உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு.