அலோபதி, சித்த மருந்துகளை சேர்த்து சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கம்|Allopathy + Siddha Together? Doctor Gives Clear Answer

Spread the love

எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கென தனி முறை உண்டு.

இரண்டு மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உடலில் எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்னொரு பக்கம், மருந்தின் வீரியம் குறையலாம். சில நேரங்களில், மருந்தின் செயலே தடைப்படலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று, நச்சுத்தன்மை கூட ஏற்படலாம்.

அதனால், இரண்டு மருந்துகளையும் ஒன்றாக… ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

அலோபதி மருந்து, சித்த மருந்து இரண்டிற்கும் இடையே குறைந்தது 1 – 2 மணி நேரம் இடைவேளை இருக்க வேண்டும்.

மேலும் ஒரு மருந்தை உணவுக்கு முன்பும், மற்றொரு மருந்தை உணவுக்குப் பிறகும் எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் போன்றவர்கள் இந்த இரண்டு மருத்துவ முறைகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது அதிக கவனம் அவசியம்.

இதனால் யாராக இருந்தாலும், இரு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளும் போது, மருத்துவரிடம் இருந்து தகுந்த ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது சிறந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *