அவங்களுக்கு ஒட்டே இருக்காதே! அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்! – நாஞ்சில் அன்பழகன்

Spread the love

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அந்தச் சந்திப்புல நடந்த விஷயத்துக்கு அவர்கிட்ட வருத்தமும் தெரிவிச்சாங்க அம்மா, அதேநேரம் விஜய்காந்த் கட்சில்லாம் வந்து கூட்டணி கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விட்டதால குறைவான தொகுதிதான் ஒதுக்க வேண்டிய நிலையில இருக்கோம்னு அம்மா சொன்னதும் ’அவங்க இவ்வளவு இறங்கிப் பேசறாங்களே’னு நெகிழ்ந்து போன டைரக்டர், ’பரவால்லம்மா, போட்டியிடறதை அடுத்த முறை பார்த்துக்கலாம், இந்த தேர்தல்ல நிச்சயம் உங்களுக்கு ஆதரவு தர்றோம்’னு அதிகாரபூர்வமா அதை அறிவிச்சார்.

இப்ப எதுக்கு சொல்ல வேண்டி வருதுன்னா, கட்சி மாறி போறது அவங்கவங்க விருப்பம். ஆனா இன்னொரு இடத்துக்குப் போன பின்னாடி நடந்து வந்த பாதை குறித்து விமர்சனம் செய்யறதுங்கிறது நல்ல நாகரிகம் கிடையாது.

நேர்மையான ஆட்சி, புனிதமான ஆட்சியை விஜய் தருவார்னு சொன்னா, இதுக்கு முன்னாடில்லாம் அந்த மாதிரி ஆட்சி நடக்கலையானு கேள்வி வருமா இல்லையா?

இவர் அமைச்சரா இருந்த போதே வாச்சாத்தி விவகாரம், தனிப்பட்ட பிரச்னைக்காக இவர் பதவி இழந்ததுனு ஆயிரம் இருக்கே, அதையெல்லாம் நாங்க எடுத்து விடலாமா?  என்றவர்,

அனாலும் காலம் தான் எவ்வளவு அதிசயத்தை நிகழ்த்துது, ஒருகாலத்துல உங்களுக்கு ஓட்டு இருக்கானு கேட்டவர், இப்ப அதே கூட்டத்துக்கு முன்னாடிதான் போய் ஓட்டுக் கேக்கவே போறார்/ வேறென்ன சொல்றது’ என முடித்துக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *