அவசரகதியில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு: எல்.முருகன், நயினார் நாகேந்திரன் விமர்சனம் | L Murugan and Nainar Nagendran Criticize State Education Policy Released in a Hurry

1372435
Spread the love

சென்னை: தமிழக அரசு சார்​பில் நேற்று வெளி​யிடப்​பட்ட மாநிலக் கல்விக் கொள்​கையை மத்​திய இணை​யமைச்​சர் உள்ளிட்டோர் விமர்​சித்​துள்​ளனர்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தமிழில் புதிது புதி​தாக பெயர் வைத்​து, மத்​திய அரசின் திட்​டங்​களுக்கு ஸ்டிக்​கர் ஒட்டி காலத்தை ஓட்டி வரும் திமுக அரசின் அடுத்த வெளி​யீ​டாகவே இந்த மாநில கல்விக் கொள்கை இருக்​கிறது. ஆங்​கிலத்​தில் இருந்து மொழி பெயர்க்​கப்​பட்​டு, இவர்​கள் தமிழில் வெளி​யிட்​டுள்ள மாநில கல்விக் கொள்​கையே புரிய​வில்​லை.

இரு​மொழிக் கொள்கை செயல்​ படுத்​தப்​படும் என்​றால் தனி​யார் பள்​ளி​களில் தேசிய கல்விக் கொள்கை கூறியபடி மூன்​றாவது மொழி இருப்​பதை திமுக அரசு ஏற்​றுக் கொள்​கிற​தா, இதற்கு பெயர் தான் திமுக​வின் சமூக நீதி​யா, தாய்​மொழி வழிக்​கல்​வியைத் தானே தேசிய கல்விக் கொள்​கை​யும் வலி​யுறுத்​துகிறது.

தமிழகப் பள்ளி மாணவர்​கள் எண்​களை அடை​யாளம் காணக்​கூட சிரமப்​படு​வ​தாக ஆய்​வு​கள் கூறுகிறதே, அரசு பள்​ளி​களில் தரமில்லை எனக்​கூறி, கூலித் தொழிலாளி கூட தனது குழந்​தைகளை தனி​யார் பள்​ளி​களில் சேர்ப்​பது ஏன், கல்வி உரிமைச் சட்டத்தின் ​கீழ், மத்​திய அரசு பங்கு நிதியை வழங்​கிய பிறகும், தமிழக அரசு அதைச் செலுத்​தாத காரணத்​தால் தனி​யார் பள்ளிகள் கட்​ட​ணத்தை செலுத்​து​மாறு பெற்​றோரை நிர்​பந்​திப்​ப​தாக செய்​தி​கள் வந்​துள்​ளன. இந்த கேள்விகளுக்கு முதல்​வர் பதிலளிக்க வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தேசிய கல்விக் கொள்​கையை வெட்டி வீராப்​புக்​காக எதிர்த்​து​விட்​டு, பின் மாணவர் நலனில் அக்​கறை கொண்​டது போல மாநிலக் கல்விக் கொள்​கையை உரு​வாக்​கு​வ​தாக மக்​களின் வரிப்​பணத்தை வீணடித்து மாணவர்​களை திமுக அரசு ஏமாற்​றி​யுள்​ளது.

மும்​மொழிக் கொள்​கைக்கு மக்​கள் அளித்து வரும் ஆதரவை பார்த்து பயந்​து, அவசரக​தி​யில் தேசிய கல்விக் கொள்​கையை பிரதி எடுத்து மாநிலக் கல்விக் கொள்​கை​யாக திமுக அரசு வெளி​யிட்​டிருக்​கிறது. அதே​நேரம், தேசிய கல்விக் கொள்​கை​யின் பல முக்​கிய அம்​சங்​களை இடம்​பெறச் செய்​யாதது மத்​திய அரசு மீதுள்ள காழ்ப்​புணர்ச்​சியை காட்​டு​கிறது.

விசிக கோரிக்கை

விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மார் எம்​.பி.: மாநிலக் கல்விக் கொள்​கை​யில் பிளஸ் 1 பொதுத்​தேர்வை ரத்து செய்​தது தவறான முடிவு. இது உயர் கல்​வி​யின் தரத்​தை​யும், தொழிற்​கல்​வி​யின் தரத்​தை​யும் கெடுத்​து​விடும். இந்த முடிவை முதல்​வர் மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். இவ்​வாறு கூறியுள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *