“அவர் எப்போதும் அனைவரின் காலிலும் விழ தயாராக இருக்கிறார்”: தேஜஸ்வி யாதவ்

Dinamani2f2024 072f2b6b3b18 D487 4585 Af7f 2663e61ea6b82fnitish.jpg
Spread the love

பிகாரில் நடந்த விழாவில் நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் நடந்துகொண்ட செயல் விடியோ வைரலாகி வருகிறது.

பிகாரில் `ஜே.பி. கங்கா பாதை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு விரைவுச் சாலையை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் உள்ளூர் எம்.பி.க்களும் கலந்து பங்கேற்றிருந்தனர்.

இந்த விழாவின் போது நிதிஷ் குமார், சாலை அமைக்கும் பணியின் தனியார் நிறுவன ஒப்பந்ததார அதிகாரியிடம் இந்தாண்டு இறுதிக்குள் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் “நீங்கள் விரும்பினால் உங்கள் பாதங்களைத் தொடுவேன்” என்று கூறி, கைகளால் வணங்கியும் உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *