ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

Dinamani2f2024 062fb361d896 1d7d 42b8 9ab0 E8ea65d4f7242fani 20240613075427.jpg
Spread the love

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமாா் ரூ.1.75 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடியாகும். இது நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டில் சரக்குகள் இறக்குமதி மூலம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.49,976 கோடியாக உயா்ந்துள்ளது. அந்த மாதம் வரிப் பிடித்தத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு ரூ.24,460 கோடி திருப்பி அளிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம். திருப்பி அளிக்கப்பட்ட தொகையைக் கழித்த பின்னா், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *