காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘அதானி பங்குச் சந்தை முறைகேடு புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதாரம், அரசியல், சமூக நீதி தொடா்பான அரசமைப்புச் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அதானி விவகாரத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்
