ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடக்கம்: 4.80 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளனர் | Teacher Eligibility exam starts tomorrow

Spread the love

சென்னை: பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு தேர்ச்சி கட்​டா​யம். டெட் தேர்​வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்​களுக்​கும், தாள்-2 பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கும் நடத்​தப்​படு​கிறது. டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்தி வரு​கிறது.

தமிழகத்​தில் 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த ஆக.11-ம் தேதி வெளி​யிட்​டது. இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​ட​வாறு டெட் தேர்வு நாளை (நவ.15) தொடங்​கு​கிறது.

முதல் நாளில் டெட் தாள்-1 தேர்​வும், 2-வது நாளான ஞாயிற்​றுக்​கிழமை தாள்​-2-ம் நடை​பெற உள்​ளன. தாள்-1 தேர்​வில் ஒரு லட்​சத்து 7 ஆயிரத்து 370 பேர், தாள்​-2-ல் 3 லட்​சத்து 73 ஆயிரத்து 438 பேர் என மொத்​தம் 4 லட்​சத்து 80 ஆயிரத்து 808 பேர் கலந்​து​ கொள்​கின்​றனர். தாள்​-1-க்கு 367 தேர்வு மையங்​களும், தாள்​-2-க்கு 1,241 தேர்வு மையங்​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *