ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பணம் பறித்த காவல் ஆய்வாளர் கைது

Dinamani2f2025 04 042fc9dd4ofe2fpc Adit.jpg
Spread the love

இதையறிந்த அரியலுார் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏ.நெப்போலியன் (45) தான் ஆய்வாளர் என்றும், மாவட்ட ஆட்சியர் தனது உறவினர் எனவும், வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகவும், அதற்கு ரூ.1 கோடி தருமாறு கூறி ரவிச்சந்திரனிடம் இருந்து பெற்றுள்ளார். மேலும், அடிக்கடி ரவிசந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவிட்டார்.

இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நெப்போலியனை கைது செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *