நேற்று தமிழ்நாட்டில் பல ஃபில்லிங் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த வரிசை பெட்ரோல், டீசலுக்காக இல்லை.
வீட்டு உபயோகச் சிலிண்டர் விநியோகக் கட்டுப்பாடுகளால் “முன்னெச்சரிக்கை’ நடவடிக்கையாக, பலரும் ஆட்டோவிற்குப் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸை பிடிக்கச் சிலிண்டர்களுடன் நின்றுகொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியாவில் பல நிலையங்களில் இந்தக் காட்சியைக் காண முடிந்தது.
அதனால், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, ‘ஆட்டோவிற்கு எல்.பி.ஜி கேஸ்களை வீட்டு உபயோகச் சிலிண்டர்களில் பிடிப்பது தவறு’ என்று உத்தரவிட்டது.
அதன் பின் தான், அந்த வரிசை மெல்ல மெல்லக் கலைய தொடங்கியது.

“ஈரான் போரினால் வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது நாம் அறிந்ததே.
ஆட்டோவிற்குப் பயன்படுத்தும் எல்.பி.ஜி மற்றும் சமையல் சிலிண்டர்களில் இருக்கும் எல்.பி.ஜி – இரண்டுமே எல்.பி.ஜி எனப்படும் ஒரே எரிபொருள் குடும்பத்தைச் சேர்ந்தவை.