பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது.
போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது.
அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார்.
2 – 1 என இந்தியா முன்னிலையுடன் ஆடிவந்த நிலையில், பெல்ஜியம் வீரர் ரோஜ் நாதன் ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடத்துக்கு கோல் அடித்தார்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 2 – 2 என சமநிலை ஆனதால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

அதில் பெல்ஜியம் தனது முதல் வாய்ப்பிலேயே கோல், இந்தியா தனது முதல் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறியது. ஆனால், ரிவ்யூவில் இந்திய வீரர் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே கோல் கீப்பர் நகர்ந்ததால் இந்தியாவுக்கு முதல் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் கோல் அடித்தார்.
அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன.
நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்காத தவற, கடைசி வாய்ப்பிலும் பெல்ஜியம் கோல் அடிக்கத் தவறியது.
இந்த சூழலில் 3 – 3 என இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 – 3 என வென்று அரையிறுதிக்குச் சென்றது.
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவிருக்கின்றன.