ரமலான் மாதத்தையொட்டி, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ரமலான் பண்டிகை இந்தாண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, மார்ச் 2 முதல் 30 வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலையில் தொழுகை செய்வார்கள்.
இந்த நிலையில், ஆசிரியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கிராம / வார்டு செயலாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான ரமலான் காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தங்களது அலுவலக நேரம் முடிவுதற்கு 1 மணி நேரம் முன்னரே செல்லலாம் என்று ஆந்திர மாநில தெரிவித்துள்ளது.