இந்நிலையில், வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் ஐசிஐசிஐ நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நம்பகத்தன்மை வாய்ந்த நிதி அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களில் இருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதைப் போன்று சில லிங்குகளை அனுப்பி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்டு) விவரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கக்கூடும்.
இதில் பயனர் ஐடி, கடவுச்சொல், யூஆர்என், பற்று அட்டை எண், அட்டையின் பின்புறமுள்ள தகவல்களான காலாவதி தேதி மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) ஆகியவற்றைத் திருட முயற்சிக்கின்றனர்.