‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி | Army General about Operation Sindoor

1372620
Spread the love

சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார்.

சென்னை ஐஐடி​யில் இந்​திய ராணுவ ஆராய்ச்சி மைய​மான ‘அக்​னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்​தில் நடை​பெற்​றது. ராணுவ தளபதி உபேந்​திர திவேதி சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, மையத்தை தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். அடுத்த நாளான 23-ம் தேதி சிறப்பு கூட்​டம் கூட்​டப்​பட்​டது. அதில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் முப்​படை தளப​தி​கள் பங்​கேற்​றோம். பதிலடி​யாக ஏதாவது செய்ய வேண்​டும் என்​ப​தில் அனை​வரும் தெளி​வாக இருந்​தோம். என்ன செய்ய வேண்​டும் என்று முடி​வெடுக்க அரசிடம் இருந்து முழு சுதந்​திரம் எங்​களுக்கு வழங்​கப்​பட்​டது. இதன்​மூலம் முழு​மை​யான நம்​பிக்​கை, அரசி​யல் தெளிவு கிடைத்​த​தால், ராணுவ தளப​தி​கள் களத்​தில் விருப்​பப்​படி செயல்பட முடிந்​தது.

இந்த சந்​திப்​புக்கு 2 நாட்​களுக்கு பிறகு, தீவிர​வாத இலக்​கு​களை எவ்​வாறு தாக்​கு​வது என்​பது குறித்து ஒரு திட்​டம் வகுக்​கப்​பட்​டது. தாக்​குதல் நடத்த வேண்​டிய இலக்​கு​களை முடிவு செய்​தோம். திட்​ட​மிடப்​பட்ட 9 இலக்​கு​களில் 7 முக்​கிய இலக்​கு​களை முழு​வதும் அழித்​தோம். இதில், ஏராள​மான தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற இரண்டே வார்த்​தை, ஒட்​டுமொத்த தேசத்​தை​யும் ஒருங்​கிணைத்​தது. அதனால்​தான் மொத்த நாடும் எங்​களுக்கு ஆதர​வாக இருந்​தது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை ஒரு சதுரங்க விளை​யாட்​டு​போல இருந்​தது. ஏனென்​றால், எதிரி​யின் அடுத்த நகர்வு என்​ன​வாக இருக்​கும், என்ன செய்​யப் போகிறார்​கள் என்​பது எங்​களுக்கு தெரி​யாது. எதிரி​களும் சதுரங்க நகர்​வு​களை செய்து வந்​தனர். அவர்​களுக்கு தொடர்ந்து ‘செக்’ வைத்​துக்​கொண்டு இருந்​தோம்.

உரி, பால​கோட் போன்ற முந்​தைய பதிலடி தாக்​குதலில் இருந்துவேறு​பட்​டது ஆபரேஷன் சிந்​தூர். உரி நடவடிக்​கை​யின்​போது,ஏவுதளங்​களை குறிவைப்​ப​தில் கவனம் செலுத்​தப்​பட்​டது. 2019-ம்ஆண்டு பால​கோட் தாக்​குதல்​களில், பதிலடி கொடுக்​கும் வித​மாக ஜம்மு காஷ்மீர் வழி​யாக ஊடுருவி பாகிஸ்​தானுக்​குள் பயிற்சி முகாம்​களை தாக்​கு​வதே நோக்​க​மாக இருந்​தது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் எதிரி​யின் பகு​திக்​குள் ஆழமாக சென்று தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாங்​கள் எதிரி​யின் மையப்​பகு​தியை அடைந்​தது இதுவே முதல் முறை. இது​தான் அவர்​களுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. ஆனாலும், இந்த மோதலில் தாங்​கள் வெற்றி பெற்​ற​தாக பாகிஸ்​தான் கதை கூறிவரு​வது​தான் வேடிக்​கை.இவ்​வாறு அவர் பேசி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *