ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அது முதலே அங்கு பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் அங்கு நசுக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் வெளியே செல்லத் தடை, கல்வி கற்க, பணிபுரிய கட்டுப்பாடுகள் என தொடர்ந்து வருகின்றன.