சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைகிறது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.
புறக்கணிக்க வலியுறுத்தல்
அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த 160-க்கும் அதிகமான அரசியல்வாதிகள் கடிதம் ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.