நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அகஸ்தீசன் கண் விழித்துப் பார்த்தபோது எதிர் அறையில் தங்கியிருந்த சிவா மற்றும் அவரது மனைவி, குழந்தையை காணவில்லை.
இதனால், சந்தேகமடைந்து தனது அறையை சோதனையிட்ட போது மேஜையில் வைத்திருந்த 2 சவரன் தங்க செயின், ஒன்னேமுக்கால் சவரன் தங்க மோதிரம் மற்றும் தனது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் தங்கச்சங்கிலி என சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை.
வெளியே வந்து பார்த்தபோது சிவா வந்த காரையும் காணவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அகஸ்தீசன் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகைகளை திருடிச் சென்றவர் ஹரிஹரன் என்பவர், சிவா என்ற பெயரில் அகஸ்தீசனுக்கு அறிமுகமாகி ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாக பொய்யான தகவலைக்கூறி அவரையும், அவரது மனைவியையும் நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.
பின்னர், அகஸ்தீசன் மனைவியுடன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிஹரனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து நகைகளை மீட்டு அகஸ்தீசனிடம் ஒப்படைத்தனர்.