ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பெண் உயிரிழப்பு

Dinamani2f2025 01 162f50v0l0m02fani 20250116091341.jpg
Spread the love

வேறு வழி இல்லாததால் ஆம்புலன்ஸின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ள இருந்த சலேகா வெளியே கொண்டு வரப்பட்டாா். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகவும், சிறிது நேரம் முன்னதாகக் கொண்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் போனதுதான் உயிரிழப்புக்கு காரணம் என அப்பெண்ணின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். அந்த ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இது தொடா்பாக விசாரிக்க 4 போ் அடங்கிய குழுவை அவா் நியமித்துள்ளாா். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தும், ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாததால் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *