ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம் | appointed 2 special advocates for police side in armstrong murder case

1348292.jpg
Spread the love

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் காவல்​துறை தரப்​பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்​கறிஞர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்​ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் தேதி ஒரு கும்​பலால் வெட்டி படுகொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் ரவுடி நாகேந்​திரன், அவரது மகன் அஸ்வத்​தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்நிலை​யில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்.​கார்த்தி​கேயன் முன்பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்​திரன், அஸ்வத்​தாமன் ஆகியோர் காணொலி மூலம் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். இந்த வழக்கில் தங்களுக்காக வாதிட வழக்​கறிஞர் வைக்​காமல் 8 பேர் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராகி இருந்​தனர்.

ஆம்ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் காவல்​துறை தரப்​பில் ஆஜராகி வாதிட மூத்த வழக்​கறிஞர்​களான ஆர்.ஸ்ரீனிவாஸ், சி.எஸ்​.எஸ்​.பிள்ளை ஆகியோர் சிறப்பு அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்ளதாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அப்போது நாகேந்​திரன் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பாலாஜி, போலீ​ஸார் 2 லட்சத்து 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வழங்​கி​யுள்ள​தாக​வும், பென்​-டிரை​வில் பல பக்கங்களை காணவில்லை என்றும், ஜாமீன் பெற்று​விடக்​கூடாது என்ற எண்ணத்​தில் போலீ​ஸார் இதுபோல முறைப்​படுத்தாத ஆவணங்களை தங்களுக்கு வழங்கி​யிருப்​ப​தாக​வும் குற்றம் சாட்​டி​னார்.

அதையடுத்து அனைத்து ஆவணங்​களை​யும் முறைப்​படுத்தி குற்றம் சாட்​டப்​பட்ட நபர்​களுக்கு வழங்க ​போலீ​ஸாருக்கு உத்​தரவிட்ட நீதிபதி, ​விசா​ரணையை பிப்​.7-ம் தே​திக்கு தள்ளி வைத்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *