புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
தில்லி துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, தலைமைச் செயலகம் பூட்டி, பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டுவேர்களை பாதுகாக்கும் வகையில், துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து பொது நிர்வாகத் துறையின் அனுமதியின்றி, யாரும் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.