நியாயவிலைக் கடைகள் மூலமே இந்த தொகை வழங்கப்பட்டு வருவதால் அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளில், இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வாய்ப்புள்ளது.
எனவே அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிப் பட்டிருக்கிறது.
ஆனால் எவ்வளவு தொகை என்பது தெவிக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களாக இந்தத் தொகையை 5000 ஆக வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
எவ்வளவு தொகை என்பது குறித்து துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம்.
’மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டமாக விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் நிதிச்சுமையைக் காரணம் காட்டி சென்ற வருடம் போல இந்தாண்டும் பணம் வேண்டாமென்றுதான் முதலில் அரசு முடிவு செய்ததாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பிறகே, இந்தாண்டு தேர்தல் வேறு இருப்பதால், விஷயம் தேர்தலில் எதிரொலிக்கலாமென அஞ்சியே பணம் கொடுக்கலாமென்கிற முடிவுக்கு பிறகு வந்ததாக கூறுகிறார்கள்.