ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி | EPS question to no action taken in kidney scam because it is ruling party MLAs hospital

1380123
Spread the love

சென்னை: ‘கிட்னி முறை​கேடு விவ​காரத்​தில் ஆளும் கட்சி எம்​எல்​ஏ​வின் மருத்​து​வ​மனை என்​ப​தால் அரசு நடவடிக்கை எடுக்​க​வில்​லை​யா’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கேள்வி எழுப்​பி​னார்.

இதுதொடர்​பாக சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: காஞ்​சிபுரத்​தில் ஒரு தனி​யார் நிறு​வனம் தயாரித்த இரு​மல் மருந்தை உட்​கொண்டு மத்​தி​யப்​பிரதேச மாநிலத்​தில் 25 குழந்​தைகள் உயி​ரிழந்​துள்​ளனர்.

அந்​நிறு​வனம் மீது ஏற்​கெனவே பலமுறை முறை​கேடு​களுக்​காக நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரித்​தும்​கூட திமுக அரசு அந்​நிறு​வனத்தை கண்​காணிக்க தவறிய​தால்​தான் இந்​த சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

இந்த மருந்து குறித்து மத்​தி​யப்​பிரதேச மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை, கடந்த அக்​.1-ம் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்​பி​யும், சுகா​தா​ரத்​துறை அலட்​சி​ய​மாக இருந்​துள்​ளது என மத்​தி​யப்​பிரதேச அமைச்​சர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். அதே​போல் கிட்னி முறை​கேடு விவ​காரத்​தில் இடைத்​தரகர்​களைத்​தான் அரசு கைது செய்​துள்​ளது.

ஆனால், இந்த முறை​கேடு நடை​பெற்ற தனி​யார் மருத்​து​வ​மனை மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை. அது ஆளும் திமுக எம்​எல்​ஏ​வின் மருத்​து​வ​மனை என்​ப​தால் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை​யா? டெல்டா மாவட்​டங்​களில் 30 லட்​சம் நெல் மூட்​டைகள் சாலைகளில் குவிக்​கப்​பட்டு மழை​யில் நனைந்து கொண்​டிருக்​கின்​றன.

கடந்த அதி​முக ஆட்​சி​யில் 22 சதவீதம் ஈரப்​ப​தம் உள்ள நெல்லை கொள்​முதல் செய்ய மத்​திய அரசிடம் சிறப்பு அனு​மதி பெற்று விவ​சா​யிகளைக் காத்​தோம். ஆனால், இந்த அரசு அதை செய்​யாத​தால் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரமே கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது. அதி​முக ஆட்​சி​யை​விட மத்​திய அரசிட​மிருந்து வரிப்​பகிர்வு மற்​றும் திட்ட நிதி மூலம் திமுக அரசுக்கு ரூ.99 ஆயிரம் கோடி கூடு​தலாக வந்​துள்​ளது. இவ்​வளவு நிதி வந்​தும் திமுக அரசு எந்​தத் திட்​டத்​தை​யும் செயல்​படுத்​த​வில்​லை.

ஃபாக்​ஸ்​கான் நிறு​வனம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்​யப்​போவ​தாக தொழில்​துறை அமைச்​சர் அறி​வித்​தார். ஆனால், அந்​நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கமே அப்​படி எந்த முதலீடும் செய்​யப்​போவ​தில்லை என மறுத்​துள்​ளது. இது​போல வெற்று அறி​விப்​பு​களை​யும், பொய் அறி​விப்​பு​களை​யும் வெளி​யிட்டு மக்​களை இந்த அரசு ஏமாற்றி வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

‘உருட்​டுக்​கடை அல்​வா’ திமுக அரசின் நிறைவேற்​றப்​ப​டாத தேர்​தல் வாக்​குறு​தி​களை விமர்​சிக்​கும் வகை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி மற்​றும் அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் ‘தி​முக உருட்டு கடை அல்​வா’ என அச்​சிடப்​பட்ட அல்வா பாக்​கெட்​டு​களை சட்​டப்​பேரவை வளாகத்​தில் வழங்​கினர். அதை அல்வா என நினைத்து அங்​கிருந்​தவர்​கள் ஆவலுடன் வாங்கி பார்த்​த​போது அதில் பஞ்சு மட்​டுமே இருந்​தது. ‘மக்​களுக்கு இப்​படிப்​பட்ட அல்​வா​வைத்​தான் இந்த அரசு கொடுக்​கிறது’ என்று பழனி​சாமி கிண்​டலாகக் குறிப்​பிட்​டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *