வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நகராமல் இருப்பதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.