ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு | 4 dies in explosion of homemade explosives kept for sale at home near Avadi

1380341
Spread the love

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆவடி அருகே வீட்​டில் விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் வெடித்​துச் சிதறிய​தில் 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆவடி அருகே பட்​டாபி​ராம் அடுத்த தண்​டுரை பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில், தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்​பனை நடை​பெற்று வந்​தது.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் 3 மணி​யள​வில் அங்கு விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் எதிர்​பா​ராத வகை​யில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழு​வதும் சேதமடைந்​தது.

இதில், தீபாவளிக்கு பட்​டாசு வாங்க வந்த திருநின்​றவூர் நத்​தம்​மேடு பகு​தியை சேர்ந்த சுனில்​பிர​காஷ்(22), யாசின்​(28) மற்​றும் நாட்டு வெடி விற்​பனை​யில் ஈடு​பட்ட இரு​வர் என 4 பேர் தீக்​காயமடைந்​தும், இடி​பாடு​களில் சிக்​கி​யும் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

தகவலறிந்து வந்த பட்​டாபி​ராம் போலீ​ஸார் மற்​றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்​கள் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். உயி​ரிழந்த 4 பேரின் உடல்​களை மீட்ட போலீ​ஸார், பிரேதப் பரிசோனைக்​காக சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

சம்பவ இடத்​தில் ஆவடி காவல் ஆணை​யர் சங்​கர், துணை ஆணை​யர் பெரோஸ் அப்​துல்​கான், ஆவடி வட்​டாட்​சி​யர் கண்​ணன் உள்​ளிட்​டோர் ஆய்வு மேற்​கொண்​டு, விபத்​துக்​கான காரணம் குறித்து விசா​ரித்​தனர்.

ஆவடி காவல் ஆணை​யர் சங்​கர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “நாட்டு வெடிகள் எங்​கிருந்து கொண்டு வரப்​பட்டன என்று விசா​ரித்து வரு​கிறோம். விசா​ரணை முடி​வில்​தான் விபத்​துக்​கான காரணம் தெரிய​வரும்” என்​றார். இந்த விபத்து தொடர்​பாக பட்​டாபி​ராம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *