இடமாற்றம் செய்யப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி நிஷாபானுவுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம் | Lawyers write to President against transferred High Court Judge Nisha Banu

Spread the love

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞ​ரான திரு​வொற்​றியூர் எஸ்​. மணி​கண்​டன் உள்​ளிட்ட 50 வழக்​கறிஞர்​கள் குடியரசுத் தலை​வர், குடியரசு துணைத் தலை​வர், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி உள்​ளிட்ட சக நீதிப​தி​கள், சென்​னை, கேரளா உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​கள், மத்​திய சட்​டத்​துறை அமைச்​சர், தமிழக, கேரள ஆளுநர்​கள், மக்​கள​வைத் தலை​வர் உள்ளிட்​டோருக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது இடத்​தில் மூத்த நீதிப​தி​யாக பணி​யாற்றி வந்த ஜெ.நிஷா​பானுவை கேரளா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாற்​றம் செய்ய உச்ச நீதி​மன்ற கொலீஜியம் கடந்த ஆக.26-ம் தேதி மத்​திய அரசுக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் பரிந்​துரை செய்​தது. அதையேற்​று, நீதிபதி நிஷா​பானுவை கேரளா​வுக்கு இடமாற்​றம் செய்து கடந்த அக்​.13-ம் தேதி குடியரசுத் தலை​வர் உத்​தர​விட்​டார்.

ஆனால், கடந்த 3 வாரங்​களாக அவர் கேரளா உயர் நீதி​மன்​றத்​துக்கு சென்று பதவி​யேற்​க​வில்​லை. சென்​னை​யிலும் அவர் தனது பணியை அக்​.14 முதல் நிறுத்​தி​விட்​டார். பொது​வாக நீதிப​தி​கள் இடமாறு​தல் உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்ட ஒரு வார காலத்​துக்​குள் பதவி​யேற்று விடு​வர்.

ஆனால், நீதிபதி நிஷா​பானு மட்​டும் 3 வாரங்​களுக்கு மேலாக அண்டை மாநில​மான கேரளா உயர் நீதி​மன்​றத்​துக்கு சென்று பதவி​யேற்​காமல் இருப்​பது என்​பது ஒட்​டுமொத்த நீதித்​துறையை​யும், உச்ச நீதி​மன்ற கொலீஜி​யத்​தை​யும், நீதித்​துறை​யின் கட்​டமைப்பு மற்​றும் மாண்​பை​யும் அவம​திக்​கும் செயல் மட்​டுமின்​றி, நீதித்​துறை​யில் மோச​மான முன்​னு​தா​ரண​மாகி விடும்.

தற்​போது சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது இடத்​தில் மூத்த நீதிப​தி​யாக பதவி வகிப்​ப​தால், தொடர்ந்து சென்னை உயர் நீதி​மன்ற கொலீஜி​யத்​தில் அங்​கம் வகிக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் அவர் இங்​கிருந்து செல்​லாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வரு​கிறார்.

எனவே, நீதித்​துறை​யின் நலன் கருதி அவரை உடனே சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். எங்​களுக்​கும் நீதிபதி நிஷா​பானுவுக்​கும் எந்​தவொரு தனிப்​பட்ட விரோத​மும் இல்​லை. நீதித்​துறை மீதுள்ள மரி​யாதை காரண​மாக இந்​த கடிதத்​தை அனுப்​பு​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​யுள்​ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *